பதிவு செய்த நாள்
19 செப்2016
15:31
ராமநாதபுரம்;''இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடந்த, இரண்டு நாட்களில், 2,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது, '' என, வங்கியின் பொது மேலாளர் மணிமாறன் பேசினார்.ராமநாதபுரத்தில், இந்தியன் வங்கி சார்பில் நடந்த வீடு, வாகன, தொழிற்கடன் வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது:இந்தியன் வங்கியின், 38 மண்டலங்கள் சார்பில் நாட்டில், 200 இடங்களில் கடன் விழா நடக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு கடந்த, இரண்டு நாள் முகாமில் 2,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி மந்தம், வர்த்தகத்தில் தொய்வு நிலை உள்ளிட்ட காரணங்களால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கடன் அளவு குறைந்து வருகிறது. வாங்கிய கடன் தொகையை வாடிக்கையாளர்கள் தவணை தவறாமல் திரும்ப செலுத்தினாலே வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படாது. ஆவணங்களின் அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|