பதிவு செய்த நாள்
05 அக்2016
03:05
மும்பை : பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தலைவர், யு.கே.சின்ஹா பேசியதாவது: பங்குச்சந்தையில், நிறுவனங்களின் பங்குகளை பட்டியலிடுவதற்கான நாட்களை, மேலும் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.முன், பங்கு வெளியீடு முடிவடைந்ததும், 12வது நாளில், நிறுவனப் பங்குகள், பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும். இதனால், முதலீட்டாளர்களின் பணம் முடங்கிக் கிடப்பதை கருத்தில் கொண்டு, பட்டியலிடும் நாட்களை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போது, பங்கு வெளியீடு முடிவடைந்த, ஆறாம் நாள், நிறுவனங்களின் பங்குகள், பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. இதை, மேலும் குறைக்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச நிலவரப்படி, பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நாட்களை, நான்காக குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில், இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|