பதிவு செய்த நாள்
05 அக்2016
03:06
மும்பை : ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டியை, வங்கிகள் குறைக்கும்; கடனுக்கான மாதாந்திர தவணையான, இ.எம்.ஐ., குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
6 ஆண்டுகளில் இல்லாததுநாட்டின் பணவீக்கம், பருவமழை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி, இரு மாதங்களுக்கு ஒருமுறை, நிதிக் கொள்கையை வெளியிட்டு வருகிறது.இறுதியாக, ஆக., 9ல், அப்போதைய, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், நிதிக் கொள்கையை வெளியிட்டார். அத்துடன், ரிசர்வ் வங்கி கவர்னர், முழு அதிகாரத்துடன் நிதிக் கொள்கை குறித்து முடிவெடுக்கும் நடைமுறை, முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, நிதிக் கொள்கையை உருவாக்க, ரிசர்வ் வங்கி கவர்னர், இரு துணை கவர்னர்கள் மற்றும் மத்திய அரசு தரப்பில், மூன்று வல்லுனர்கள் அடங்கிய, நிதிக் கொள்கை குழு அமைக்கப்பட்டது. இக்குழு, இரு நாட்களாக கூடி, பணவீக்கம், பொருளாதார சூழல் உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து, முதல் நிதிக் கொள்கை அறிக்கையை தயாரித்தது. இதை, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், நேற்று வெளியிட்டார். அதில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும், குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6.50 சதவீதத்தில் இருந்து, 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத, குறைந்தபட்ச வட்டி விகிதமாகும்.
இ.எம்.ஐ., குறையும்இதையடுத்து, வங்கிகள் பல்வேறு கடன்களுக்கான வட்டியை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறையும்; கடனுக்கான மாதாந்திர தவணையான, இ.எம்.ஐ., குறையும். ரிசர்வ் வங்கி கவர்னராக, உர்ஜித் படேல் பொறுப்பேற்ற பின், வெளியிட்ட முதல் நிதிக் கொள்கையில், ‘ரெப்போ’ வட்டி குறைக்கப்பட்டதை அடுத்து, நேற்று, பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|