பங்­குச்­சந்­தையில் பங்­குகள் பட்­டி­ய­லிடும் நாட்கள் குறை­யுமா?பங்­குச்­சந்­தையில் பங்­குகள் பட்­டி­ய­லிடும் நாட்கள் குறை­யுமா? ... பொரு­ளா­தார வளர்ச்சியில் வலி­மை­; இந்­தி­யா­வுக்கு உலக வங்கி பாராட்டு! பொரு­ளா­தார வளர்ச்சியில் வலி­மை­; இந்­தி­யா­வுக்கு உலக வங்கி பாராட்டு! ...
‘ரெப்போ’ வட்டி குறைப்பு: ரிசர்வ் வங்கி அதி­ரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2016
03:06

மும்பை : ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்கு வழங்கும் கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்தை, 0.25 சத­வீதம் குறைத்­துள்­ளது. இதனால், வீடு, வாகனம் உள்­ளிட்ட கடன்­க­ளுக்­கான வட்­டியை, வங்­கிகள் குறைக்கும்; கட­னுக்­கான மாதாந்­திர தவ­ணை­யான, இ.எம்.ஐ., குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
6 ஆண்டுகளில் இல்லாததுநாட்டின் பண­வீக்கம், பரு­வ­மழை உள்­ளிட்ட அம்­சங்­களின் அடிப்­ப­டையில், ரிசர்வ் வங்கி, இரு மாதங்­க­ளுக்கு ஒரு­முறை, நிதிக் கொள்­கையை வெளி­யிட்டு வரு­கி­றது.இறு­தி­யாக, ஆக., 9ல், அப்­போ­தைய, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், நிதிக் கொள்­கையை வெளி­யிட்டார். அத்­துடன், ரிசர்வ் வங்கி கவர்னர், முழு அதி­கா­ரத்­துடன் நிதிக் கொள்கை குறித்து முடி­வெ­டுக்கும் நடை­முறை, முடி­வுக்கு வந்­தது.
இதை­ய­டுத்து, நிதிக் கொள்­கையை உரு­வாக்க, ரிசர்வ் வங்கி கவர்னர், இரு துணை கவர்­னர்கள் மற்றும் மத்­திய அரசு தரப்பில், மூன்று வல்­லு­னர்கள் அடங்­கிய, நிதிக் கொள்கை குழு அமைக்­கப்­பட்­டது. இக்­குழு, இரு நாட்­க­ளாக கூடி, பண­வீக்கம், பொரு­ளா­தார சூழல் உள்­ளிட்ட அம்­சங்­களை ஆராய்ந்து, முதல் நிதிக் கொள்கை அறிக்­கையை தயா­ரித்­தது. இதை, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், நேற்று வெளி­யிட்டார். அதில், ரிசர்வ் வங்­கி­யிடம் இருந்து வங்­கிகள் பெறும், குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி, 0.25 சத­வீதம் குறைக்­கப்­பட்டு, 6.50 சத­வீ­தத்தில் இருந்து, 6.25 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. இது, கடந்த ஆறு ஆண்­டு­களில் இல்­லாத, குறைந்­த­பட்ச வட்டி விகி­த­மாகும்.
இ.எம்.ஐ., குறையும்இதை­ய­டுத்து, வங்­கிகள் பல்­வேறு கடன்­க­ளுக்­கான வட்­டியை குறைக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதனால், வீடு, வாகனம் உள்­ளிட்ட கடன்­க­ளுக்­கான வட்டி குறையும்; கட­னுக்­கான மாதாந்­திர தவ­ணை­யான, இ.எம்.ஐ., குறையும். ரிசர்வ் வங்கி கவர்­ன­ராக, உர்ஜித் படேல் பொறுப்­பேற்ற பின், வெளி­யிட்ட முதல் நிதிக் கொள்­கையில், ‘ரெப்போ’ வட்டி குறைக்­கப்­பட்­டதை அடுத்து, நேற்று, பங்­குச்­சந்­தைகள் எழுச்சி கண்­டன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)