பதிவு செய்த நாள்
08 அக்2016
07:23
சென்னை : அசோக் லேலாண்டு நிறுவனம், பாதுகாப்பு துறையின் மூலம், 2,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது.
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த, அசோக் லேலாண்டு நிறுவனத்தின் ஒரு பிரிவான, அசோக் லேலாண்டு டிபென்ஸ் சிஸ்டம், பாதுகாப்பு துறையில் பயன்படுத்தக் கூடிய வாகனங்களை, உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில், அசோக் லேலாண்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், பாதுகாப்பு துறையின் மூலம், 2,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், வினோத் தாஸரி கூறியதாவது: எங்கள் நிறுவனம், பாதுகாப்பு துறைக்கான, 15 டெண்டரில், 13ல் தேர்வாகி உள்ளது. தற்போது, 500 கோடி ரூபாய் மதிப்பலான, பாதுகாப்பு வாகனங்கள் சப்ளை செய்யப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், பாதுகாப்பு துறையின் மூலம், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|