பதிவு செய்த நாள்
08 அக்2016
07:25
சண்டிகர் : குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணையமைச்சர், ஹரிபாய் பார்திபார் சவுத்ரி கூறியதாவது: நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் ஆற்றல், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் உள்ளது. அதனால், இத்துறையை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இத்துறையில், கூட்டாக தொழில் துவங்க விரும்பும் தொழில்முனைவோருக்கு, நிதி வசதி மையங்கள் மூலம், தேவையான நிதியுதவி செய்யப்படும். தொழில் வளர்ச்சிக்கு தேவையான ஆய்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறையின் தகவல் சேமிப்பு மையங்களாகவும் செயல்படும்.இத்திட்டத்திற்காக, 2,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும், மொத்தம், 37 மையங்கள் அமைக்கப்படும். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தியோருக்கு, சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|