பதிவு செய்த நாள்
08 அக்2016
07:27
புதுடில்லி : மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ், 10 மாநிலங்களில், 250 கொள்முதல் நிலையங்கள், முதற்கட்டமாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன என, மத்திய வேளாண் துறை அமைச்சர், ராதா மோகன் சிங் தெரிவித்தார். அவர், மேலும் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏப்., மாதம், ‘இநாம்’ என்ற மின்னணு தேசிய வேளாண் சந்தை என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்திற்காக, மொபைல் போன், ‘ஆப்’ வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இவற்றின் மூலம், விவசாயிகள், அதிக விலை கிடைக்கும் பகுதிகளில், தங்கள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம். மின்னணு தேசிய வேளாண் திட்டத்தின் கீழ், 2018ம் ஆண்டுக்குள், நாடு முழுவதும் உள்ள, 585 மொத்த விலைகொள்முதல் நிலையங்களை ஒருங்கிணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது, முதற்கட்டமாக, 10 மாநிலங்களில் உள்ள, 250 மொத்த விலை கொள்முதல் நிலையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|