பதிவு செய்த நாள்
18 அக்2016
06:09
சென்னை : இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த, அசோக் லேலாண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் பஸ்சை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், வினோத் கே தாஸரி கூறியதாவது: புதிய தொழிநுட்பத்தில், பஸ்களை அறிமுகம் செய்வதில், அசோக் லேலாண்டு முதலிடத்தில் உள்ளது. மத்திய அரசு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனங்களை தயாரிக்குமாறு வலியுறுத்தி வருகிறது. அதை கடைபிடிக்கும் வகையில், எங்கள் நிறுவனம், முதன்முறையாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் பஸ்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த பஸ்சை, 2017 ஜன., மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டோம். ஆனால், அதற்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மூன்று மணி நேரத்தில், எலக்ட்ரிக் பஸ்சை, சார்ஜ் செய்ய முடியும்; ஒருமுறை முழு சார்ஜ் செய்தால், 150 கி.மீ., துாரம் செல்லும். தற்போது, மஹாராஷ்டிரா, குஜராத், ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில், எலக்ட்ரிக் பஸ்சுக்கான, ‘ஆர்டர்’ வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|