பதிவு செய்த நாள்
28 அக்2016
13:38
புதுடில்லி : இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 50 சதவீதம் உயர்ந்திருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.தரத்தில் சிறந்து விளங்கினாலும் விலை அதிகமென்பதால் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்கள் இதுவரை குறைவான அளவிலேயே விற்பனையாகி வந்தன. ஆனால் கடந்த ஒரே வருடத்தில் மட்டும் சுமார் 25 லட்சம் ஆப்பிள் ஐபோன்கள் இந்தியாவில் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது 2015-2016-ம் ஆண்டில் மட்டும் ஐபோன்கள் விற்பனை 50 சதவீதம் இந்தியாவில் அதிகரித்துள்ளது.உலகின் மிகப்பெரிய சந்தையாக விளங்கும் இந்தியாவில் விற்பனையை மேலும் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இதுகுறித்து கூறுகையில் "இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 50 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் இளைய தலைமுறையினர் 4ஜி சேவையை நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனால் ஸ்மார்ட் போன்களுக்கான தேவை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஐபோன் விற்பனையை இந்தியாவில் அதிகரிக்கும் வகையில் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணையத் திட்டமிட்டு வருகிறோம்" என்றார். இந்தியாவில் உள்ள 50 சதவீதம் பேர் 25 வயதுக்கும் குறைவானவர்களாக இருப்பதால் ஐபோன் விற்பனைக்கான தேவை அதிகரித்து வருகிறது. மேலும் ஸ்மார்ட் போன் விற்பனையில் இந்தியாவின் நம்பர் 1 கம்பெனியாக விளங்கும் சாம்சங்கின் கேலக்சி நோட் 7 போன்கள் தீப்பிடித்து எரிந்ததால் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி இந்தியாவில் வலுவாகக் காலூன்றிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|