பதிவு செய்த நாள்
31 அக்2016
23:25
ஜெய்ப்பூர் : போஷ் நிறுவனம், ஜெய்ப்பூர் ஆலையில் உற்பத்தியை துவக்கியது.
மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும், போஷ் நிறுவனத்திற்கு, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில், ஜெய்ப்பூர் தொழிற்சாலையில் இருந்து, கழிவுநீர் வெளியேற்றுவது தொடர்பாக எழுந்த புகாரையடுத்து, உற்பத்தியை நிறுத்துமாறு, அம்மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம், போஷ் நிறுவனத்திற்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பியது; இதையடுத்து உற்பத்தி நிறுத்தப்பட்டது.
பின், உற்பத்தி நிறுத்த தடை உத்தரவை தளர்த்துமாறு, போஷ், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தது. இதனால், அந்த உத்தரவு, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, மீண்டும் உற்பத்தியை துவக்கியுள்ளது, போஷ் நிறுவனம். ஒரு நாள் ஆலையை மூடியதால், அந்நிறுவனத்திற்கு, 2.50 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|