பதிவு செய்த நாள்
31 அக்2016
23:28
புதுடில்லி : இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, ‘கெய்ட்’ வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளி பண்டிகை காலத்தில் நடைபெற்ற விற்பனை குறித்து, டில்லி, மும்பை, நாக்பூர் உள்ளிட்ட, 20 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், சீன பொருட்கள், கடந்த ஆண்டு தீபாவளியின் போது விற்பனையானதை விட, இந்தாண்டு, 60 சதவீதம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு, சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்ட, சீன பொருட்கள் புறக்கணிப்பு பிரசாரம் துணை புரிந்துள்ளது; வியாபாரிகளும், சீன பொருட்களை புறக்கணித்து உள்ளனர்.
சில வியாபாரிகள், ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்’ என, கடைகளில் விளம்பரம் செய்திருந்தனர். மக்களும், சீன தயாரிப்புகளை புறக்கணித்து, உள்நாட்டில், காகிதம், களிமண், பிளாஸ்டிக் போன்றவற்றில் செய்யப்பட்ட விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி, வீடுகளில் ஒளியூட்டினர். இதனால், சீன பொருட்கள் விற்பனை சரிந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|