தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.392 குறைவு ... சுங்க கட்டணம் ரத்து: ரூ.150 கோடி இழப்பு சுங்க கட்டணம் ரத்து: ரூ.150 கோடி இழப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூ.100 நோட்டுகள் தாராளமாக கிடைக்கும்: எஸ்.பி.ஐ., அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2016
11:19

மும்பை: புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அதிக அளவில், 100 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என, நேற்று முன்தினம் இரவு, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், பதற்றமடைந்த மக்கள், இந்த நோட்டுக்களை மாற்றவும், செலவுக்காக, 100 ரூபாய் நோட்டுக்களை எடுக்கவும் நேற்று முன்தினம், ஏ.டி.எம்.,களில் முண்டியடித்தனர்.நேற்றும், இன்றும், ஏ.டி.எம்.,கள் செயல்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாற்று ஏற்பாடுகள் குறித்து, எஸ்.பி.ஐ., நிர்வாக மேலாளர் ரஜ்னீஷ் குமார் கூறியதாவது: பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை. தேவையான அளவுக்கு, 100 ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவை கையில் இருப்பு உள்ளன. நாடு முழுவதும் உள்ள, எஸ்.பி.ஐ., குழுமத்தின், 17 ஆயிரம் கிளைகள், 55 ஆயிரம் ஏ.டி.எம்.,க்கள், 7,000 பணத்தை டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் செயல்படுகின்றன. இவற்றுக்கு, 100 ரூபாய் நோட்டுக்களை அதிக அளவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு சிரமம் இல்லாத வகையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல், செல்லாத, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கும், வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூன்றாவது முறை : இதற்கு முன், இரண்டு முறை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷார் காலத்தில், 1946ல் முதல் முறையாக இவ்வாறு அறிவிக்கப்பட்டது. கடந்த, 1978ல், பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியின்போது, 1,000; 5,000; 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டன.தற்போது, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)