பதிவு செய்த நாள்
11 நவ2016
06:07
மும்பை : டாடா குழுமத்தைச் சேர்ந்த, இந்தியன் ஓட்டல்ஸ் நிறுவனம், தாஜ் ஓட்டல்களை நிர்வகித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம், கடந்த வாரம் நடைபெற்றது. அதில், நிறுவனத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் தலைமை மீது நம்பிக்கை உள்ளதாக, எச்.டி.எப்.சி., தலைவர் தீபக் பரேக், கீகி தாதிசேத் உள்ளிட்ட, தனி இயக்குனர்கள் தெரிவித்திருந்தனர். இது, டாடா சன்ஸ் நிறுவன தலைவர் பதவியில் இருந்து, சைரஸ் மிஸ்திரியை நீக்கிய, டாடா குழுமத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து, டாடா சன்ஸ் கோரிக்கைப்படி, இந்தியன் ஓட்டல்ஸ் நிறுவனம், சிறப்பு பொதுக்குழுவை கூட்ட உள்ளது.
அதில், பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதலுடன், சைரஸ் மிஸ்திரி, இந்தியன் ஓட்டல்ஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என, தெரிகிறது. ஏற்கனவே, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின், தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்டு, இஷாத் ஹூசைன் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|