துறை­மு­கங்­களை மேம்­ப­டுத்த ரூ.1 லட்சம் கோடிதுறை­மு­கங்­களை மேம்­ப­டுத்த ரூ.1 லட்சம் கோடி ... ரொக்கம் இல்­லா­விட்­டாலும் பர­வா­யில்லை:மனம் மாறிய நிறு­வ­னங்கள் ரொக்கம் இல்­லா­விட்­டாலும் பர­வா­யில்லை:மனம் மாறிய நிறு­வ­னங்கள் ...
7 லட்சம் மாண­வர்­களை தொழி­ல­தி­பர்­க­ளாக்க இலக்கு: மத்­திய அரசு புதிய திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2016
06:09

புது­டில்லி : மத்­திய அரசு, அடுத்த ஐந்து ஆண்­டு­களில், 7 லட்சம் மாண­வர்­க­ளுக்கு தொழில் பயிற்சி அளித்து, தொழி­ல­தி­பர்­க­ளாக உரு­வாக்கும் நோக்கில், ‘பிரதான் மந்­திரி யுவ யோஜனா’ என்ற புதிய திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.
டில்­லியில், நேற்று முன்­தினம், திறன் மேம்­பாடு மற்றும் தொழில் முனைவு துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தலை­மையில், ‘தர­மான ஆற்றல்’ என்ற தலைப்பில், மாநாடு நடை­பெற்­றது. பெரும்­பான்மை மாநில அரசு பிர­தி­நி­திகள் பங்­கேற்ற இந்த மாநாட்டில், இளை­ஞர்கள், மாண­வர்கள் ஆகி­யோ­ருக்­கான தொழில் முனைவோர் பயிற்சித் திட்­டத்தை, ராஜீவ் பிரதாப் ரூடி அறி­வித்தார்.
அப்­போது, அவர் பேசி­ய­தா­வது: இளை­ஞர்­க­ளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கும் புதிய திட்­டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்­டு­களில், 7 லட்சம் மாண­வர்­க­ளுக்கு, தொழில் ­மு­னைவோர் பயிற்சி அளிக்­கப்­படும். இதற்­காக, 499.94 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்டு உள்­ளது. மாநில அர­சு­க­ளுடன் இணைந்து, 3,050 கல்வி மையங்­களில், இந்த பயிற்சி திட்டம் செயல்­ப­டுத்­தப்­படும். இதற்­காக, என்.ஐ.இ.எஸ்.பி.யு.டி., மற்றும் ஐ.ஐ.இ., பயற்சி மையங்கள் தேர்வு செய்­யப்­பட்டு உள்­ளன. இவை, 125 நாடு­களைச் சேர்ந்த, 2,600 பேர் உட்­பட, 7 லட்­சத்­திற்கும் அதி­க­மா­னோ­ருக்கு, தொழில் முனைவோர் பயிற்­சியை வெற்­றி­க­ர­மாக வழங்­கி­யுள்­ளன. இதை­யொட்டி, உள்­நாட்டில் இளை­ஞர்­க­ளுக்கு, மேலும் அதிக வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்கும் நோக்கில், இத்­திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.
இத்­திட்­டத்தின் கீழ், 2,200 கல்­லுா­ரிகள், பல்­க­லைகள், 300 பள்­ளிகள், 500 இந்­திய தொழிற்­கல்வி மையங்கள், 50 தொழில்­மு­னைவோர் மேம்­பாட்டு மையங்கள் ஆகி­ய­வற்றின் மாண­வர்­க­ளுக்கு, வலை­தளம் வாயி­லாக தொழில் ­மு­னைவோர் பயிற்சி வழங்­கப்­படும். அத்­துடன், தொழில் விபரங்கள், தொழில் முன்­னோ­டி­களின் ஆலோ­ச­னைகள் உட்­பட, தொழில் துவங்­கு­வ­தற்­கான அனைத்து உத­வி­க­ளையும், இளை­ஞர்கள் பெறலாம். தேசிய மற்றும் சர்­வ­தேச தரத்­தி­லான தொழில் முனைவோர் கல்விப் பயிற்சி, இளை­ஞர்­க­ளுக்கு வழங்­கப்­படும்.
அமைச்­சகம், 2020க்குள், ஒரு கோடி பேருக்கு திறன் மேம்­பாட்டு பயிற்சி வழங்க இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது. இதற்­காக, பிர­தமர் திறன் மேம்­பாட்டு திட்ட நிதியில் இருந்து, 3,000 கோடி ரூபாய், மாநில அர­சு­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்டு உள்­ளது. இதன்­படி, மாநி­லங்­களில் அமைக்­கப்­படும் திறன் மேம்­பாட்டு பயிற்சி மையங்கள், ஆய்­வுக்­கூ­டங்கள் மற்றும் பயிற்சி சாத­னங்­களின் தரம் உள்­ளிட்­டவை தொடர்­பான வழி­காட்டு நெறி­மு­றைகள், தற்­போது வெளி­யி­டப்­பட்டு உள்­ளன.மத்­திய அரசின் திட்­டங்கள், அதி­க­ளவில், முதல் தலை­முறை தொழில் முனை­வோரை உரு­வாக்க உதவும். இவ்­வாறு அவர் கூறினார்.
முதல் தலை­மு­றை­யினர் :சிறப்­பாக செயல்­படும், 30 வய­திற்கு உட்­பட்ட, முதல் தலை­முறை தொழில் முனை­வோர்­க­ளுக்கு, 2017 ஜன., 16ல், மத்­திய அரசின் தொழில்­ மு­னைவோர் விரு­துகள் வழங்­கப்­படும் என, மத்­திய திறன் மேம்­பாட்டு அமைச்­சகம் அறி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)