பதிவு செய்த நாள்
12 நவ2016
01:17
பெங்களூரு;மின்னணு வர்த்தக நிறுவனங்கள், பொருட்களை, ‘டெலிவரி’ செய்த பின், மின்னணு பரிவர்த்தனை மூலம், பணத்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கின்றன.அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள், மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததால் பொருட்களை பெற்றுக் கொண்ட பின் பணம் செலுத்தும் ‘கேஷ் ஆன் டெலிவரி’ சேவையை தற்காலிகமாக நிறுத்தி விட்டன.மின்னணு வர்த்தக நிறுவனங்களின் மொத்த ஆர்டரில், 70 சதவீதம், பொருட்களை டெலிவரி செய்யும் போது பணம் தரும் முறையில்தான் நடக்கின்றன.
இந்நிலையில், கேஷ் ஆன் டெலிவரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளானது. இதையடுத்து, அந்நிறுவனங்கள், பொருட்களை டெலிவரி செய்த பின், ரொக்கமாக பணம் பெற்றுக்கொள்ளாமல்,இ – வாலட், கிரெடிட் கார்டு ஆகியவற்றின் மூலம், பணத்தை பெற்றுக்கொள்ள துவங்கியிருக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|