பதிவு செய்த நாள்
12 நவ2016
01:20
புதுடில்லி:இந்தியா, விரைவில் சீனாவை பின்னுக்கு தள்ளும் என, ‘லி எகோ’ நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. சீனாவை சேர்ந்த லி எகோ நிறுவனம், மொபைல் போன்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. மேலும், உள்நாட்டில், மொபைல் போன் அசெம்பிள் செய்ய, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கும் பணியையும், அந்நிறுவனம் துவக்கியுள்ளது. இதுவரை, அந்நிறுவனம், ஒரு கோடி டாலர் வரை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், இந்தியாவில், சில்லரை விற்பனையில், ‘சிங்கிள் பிராண்ட்’ கடைகள் துவக்க, அனுமதி கோரியுள்ளது. இந்திய சந்தை சிறப்பாக உள்ளது. விரைவில், இந்தியா, சீனாவை பின்னுக்கு தள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையை கைப்பற்ற சிறப்பான சேவைகளை வழங்குவோம். அதற்காக கூடுதலாக முதலீடு செய்யவும் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|