பதிவு செய்த நாள்
18 நவ2016
00:54
சென்னை : டி.வி.எஸ்., எமரால்டு நிறுவனம், மூன்று ஆண்டுகளில், 2.50 லட்சம் சதுர அடியில், கட்டுமான நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
டி.வி.எஸ்., குழுமத்தைச் சேர்ந்த, எமரால்டு ஹெவன் ரியாலிட்டி நிறுவனம், ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளில், 2.50 லட்சம் சதுர அடியில், குடியிருப்புகள் கட்ட முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் தலைவர் சந்திரமவுலி கூறியதாவது: எங்கள் நிறுவனம், கொளப்பாக்கத்தில், 448 அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்துள்ளது. இந்த திட்டத்தின் மொத்த செலவு, 350 கோடி ரூபாய். ரியல் எஸ்டேட் துறைக்கு, ஜி.எஸ்.டி., சாலை முக்கிய சந்தையாக உள்ளது. அங்கு, எங்கள் நிறுவனம், புதிய திட்டங்கள் துவக்க முக்கியத்துவம் அளித்து வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 2.50 லட்சம் சதுர அடியில், கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|