பதிவு செய்த நாள்
18 நவ2016
23:28
புதுடில்லி : நிஸான் நிறுவனம், இந்தியாவில், எலக்ட்ரிக் கார்களை, விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிஸான், கார்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், சுற்றுச்சூழலை பாதிக்காத, பேட்டரியால் இயங்கக் கூடிய, ‘நிஸான் லீப்’ என்ற எலக்ட்ரிக் காரை, 2010 டிச., மாதம், ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து, அந்த காரை, 2011ல், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மற்றும் கனடாவில் அறிமுகப்படுத்தியது. அந்த கார், வாடிக்கையாளரிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, 2010ல் இருந்து, 2016 செப்., வரை, 2.40 லட்சம் நிஸான் லீப் கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்நிலையில், இந்த எலக்ட்ரிக் காரை, இந்தியாவில், விரைவில் அறிமுகம் செய்ய, நிஸான் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் மல்கோத்ரா கூறியதாவது: எங்கள் நிறுவனம், இந்தியாவில், எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய தயாராக உள்ளது. ஆனால், மத்திய அரசின் வரிவிதிப்பு, அடிப்படை கட்டுமான பணிகள் ஆகியவற்றுக்காக காத்திருக்கிறது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், டிச., 2ல், நிஸான் ஜி.டி.ஆர்., கார் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த அக்டோபரில், நிஸான், 6,108 கார்களை விற்பனை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|