விசைத்­தறி துறை வளர்ச்­சிக்கு இரண்டு புதிய திட்­டங்கள்விசைத்­தறி துறை வளர்ச்­சிக்கு இரண்டு புதிய திட்­டங்கள் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ...
சுங்க சாவடிகளில் இனி வண்டி நிற்காது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2016
10:13

புதுடில்லி : சுங்கச் சாவடிகளை கடக்கும் வாகனங்கள், அங்கு கட்டணம் செலுத்துவதற்காக, நின்று செல்வதை தவிர்க்கும் வகையில், வாகனங்களில் நவீன கருவி பொருத்தப்பட உள்ளது.
இதுபற்றிய தெளிவான அறிவிப்புக்காக, தமிழக வாகன உற்பத்தி நிறுவனங்கள் காத்திருக்கின்றன. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், வாகனக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், சுங்கச் சாவடி களில், வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இனி கார் உள்ளிட்ட வாகனங்களில், ஆர்.எப்.ஐ.டி., என்ற, 'ரேடியோ பிரீகுவென்சி ஐடென்டிபிகேஷன்' கருவியை, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பொருத்த வேண்டும்.
அதாவது, இனி புதிதாக தயாராகும் வாகனங்களில், கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும். அந்த கருவி பொருத்தி இருந்தால், முன்கூட்டியே செய்யப்பட்டிருக்கும் வசதிகள் மூலமாக, சுங்கச் சாவடிகளை வாகனம் கடக்கும் போது, கட்டணம் தானாக கழிந்து விடும். எனினும், இது எப்படி செயல்படும்; என்ன வகையான தொழில்நுட்பம் போன்ற முழு தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. அதற்காக, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் காத்திருக்கின்றன. இதுகுறித்து, சென்னையில் உள்ள, 'போர்டு' வாகன ஆலையின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 'அதுபோன்ற உத்தரவு வந்துள்ளது. ஆனால், அது எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை கள் கூறப்படவில்லை.

'அதேபோல், எப்போது அமலுக்கு வரும் என்ற தகவலும் இல்லை. அதிகாரப்பூர்வ தகவல் வந்த பிறகே, அது பற்றி கருத்து தெரிவிக்க முடியும்' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)