பதிவு செய்த நாள்
26 நவ2016
11:36
புதுடில்லி:'ரியல் எஸ்டேட் மற்றும் கல்வி நிறுவனங்களில்தான், கறுப்பு பணப் புழக்கம் அதிக மாக உள்ளது' என, லோக்சபா வில் அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில், நேற்று, கேள்வி நேரத்தின் போது, கறுப்பு பணம் தொடர்பான கேள்விக்கு, நிதித்துறை இணை அமைச்சர், சந்தோஷ் குமார் கங்வார், எழுத்து மூலம் அளித்த பதில்: நாட்டில், 2013 - 14ல், 569 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி, 11 ஆயிரம் கோடி ரூபாய், கறுப்பு பணத்தை கைப்பற்றினர். 2014 - 15ம் நிதிஆண்டில், 545 இடங்களில் சோதனை நடத்தி, 10,000 கோடி ரூபாய், கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது.
பின், 2015 - 16ல், 445 இடங்களில் சோதனை நடத்தி, 11,000 கோடி ரூபாய் கறுப்பு பணம் கைப்பற்றப் பட்டது. மூன்று நிதியாண்டுகளில், 32 ஆயிரம் கோடி ரூபாய், கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது; 2,282 கோடி ரூபாய் மதிப்பிலான, கணக்கில் வராத சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வருமானவரிதுறை நடத்திய சோதனையில், ரியல் எஸ்டேட் தொழில், கல்வி நிறுவனம், நிதி நிறு வனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில், அதிக ளவில் கறுப்பு பணம் புழங்குவது தெரிய வந்தது. கறுப்பு பண பதுக்கலை கட்டுப்படுத்த, பல நடவடிக் கைகளை அரசு எடுத்து வருகிறது. 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ரொக்கமாக பரிமாற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
'பினாமி' பரிவர்த்தனை தடுப்பு சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்தால், பான் எண்ணை கட்டாயம் குறிப்பிடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு சந்தோஷ் கங்வார் பதில் அளித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|