தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ... அண்மை ஏடிஎம்.,களில் பணம் உள்ளதா என்பதை அறிய உதவும் 5 ஆப்ஸ் அண்மை ஏடிஎம்.,களில் பணம் உள்ளதா என்பதை அறிய உதவும் 5 ஆப்ஸ் ...
ரியல் எஸ்டேட் துறையில் கறுப்பு பணம் 'ஓஹோ'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2016
11:36

புதுடில்லி:'ரியல் எஸ்டேட் மற்றும் கல்வி நிறுவனங்களில்தான், கறுப்பு பணப் புழக்கம் அதிக மாக உள்ளது' என, லோக்சபா வில் அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில், நேற்று, கேள்வி நேரத்தின் போது, கறுப்பு பணம் தொடர்பான கேள்விக்கு, நிதித்துறை இணை அமைச்சர், சந்தோஷ் குமார் கங்வார், எழுத்து மூலம் அளித்த பதில்: நாட்டில், 2013 - 14ல், 569 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி, 11 ஆயிரம் கோடி ரூபாய், கறுப்பு பணத்தை கைப்பற்றினர். 2014 - 15ம் நிதிஆண்டில், 545 இடங்களில் சோதனை நடத்தி, 10,000 கோடி ரூபாய், கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது.
பின், 2015 - 16ல், 445 இடங்களில் சோதனை நடத்தி, 11,000 கோடி ரூபாய் கறுப்பு பணம் கைப்பற்றப் பட்டது. மூன்று நிதியாண்டுகளில், 32 ஆயிரம் கோடி ரூபாய், கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது; 2,282 கோடி ரூபாய் மதிப்பிலான, கணக்கில் வராத சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வருமானவரிதுறை நடத்திய சோதனையில், ரியல் எஸ்டேட் தொழில், கல்வி நிறுவனம், நிதி நிறு வனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில், அதிக ளவில் கறுப்பு பணம் புழங்குவது தெரிய வந்தது. கறுப்பு பண பதுக்கலை கட்டுப்படுத்த, பல நடவடிக் கைகளை அரசு எடுத்து வருகிறது. 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ரொக்கமாக பரிமாற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
'பினாமி' பரிவர்த்தனை தடுப்பு சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்தால், பான் எண்ணை கட்டாயம் குறிப்பிடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு சந்தோஷ் கங்வார் பதில் அளித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)