பதிவு செய்த நாள்
02 டிச2016
00:06
சென்னை: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு மையத்தின் இயக்குனர், டி.சண்முகநாதன் கூறியதாவது:கோவையில், தேசிய விற்பனையாளர் மேம்பாட்டு திட்ட கண்காட்சி, வரும், 14ம் தேதி துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
குறு, சிறு, நடுத்தர தொழில்களைச் சேர்ந்த, 60 விற்பனையாளர்கள், தங்களின் தயாரிப்புகளையும், உற்பத்தித் திறன் விபரங்களையும், காட்சிக்கு வைக்க உள்ளனர். அவர்களுக்கு பணிகளை வழங்கும், 20 நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறையைச் சேர்ந்த, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பெல், ரயில்வே, பாதுகாப்புத் துறை நிறுவனங்களும், இக்கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. இக்கண்காட்சியில், புதிய விற்பனையாளர்களின் பதிவும் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில், 5 கோடி ரூபாய்க்கு வர்த்தக பரிமாற்றம் நடைபெற்றது. இது, இந்தாண்டு, 15 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|