பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறுகிறது ரயில்வேபணமில்லா பரிவர்த்தனைக்கு மாறுகிறது ரயில்வே ... பண மதிப்பு நீக்கத்தால் ‘எம் – காமர்ஸ்’ துறை செழிக்கும் பண மதிப்பு நீக்கத்தால் ‘எம் – காமர்ஸ்’ துறை செழிக்கும் ...
2017 ல் மீண்டும் வருகிறது நோக்கியா ஸ்மார்ட்போன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2016
16:23

புதுடில்லி : கோடி கணக்கான இந்தியர்களின் ஆதரவை பெற்ற நோக்கியா ஸ்மார்ட் போன்கள் மீண்டும் சந்தைக்கு விற்பனைக்கு வர உள்ளது. 2017 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நோக்கியா ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு விற்பனைக்கு வர உள்ளன.
நோக்கியா நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய பணியாளர்களை கொண்ட ஹச்எம்டி குளோபல் என்ற புதிய கம்பெனி இந்த ஸ்மார்ட் போன்களை உருவாக்கி உள்ளது. உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதை அடுத்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு 500 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்த அடிப்படையில் ஸ்மார்ட்போன் உற்பத்திக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் வலுவாக காலூன்ற வேண்டும் என்பதே எங்களின் லட்சம். ஸ்மார்ட்போன்ற உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வர வேண்டும் என விரும்புவதாக நோக்கியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ள ஹச்எம்டி குளோபல் நிறுவனத்தின் தலைவர் பிளோரியன் சிய்ஷி தெரிவித்துள்ளார். பின்லாந்தைச் சேர்ந்த இந்நிறுவனம் புதிய நோக்கியா போன்களை பல்வேறு விலைகளில் தயாரிக்க உள்ளது. அதே சமயம் டேப்லட்களும் உற்பத்தி செய்த விற்பனைக்கு அனுப்ப உள்ளது. புதிதாக உற்பத்தி செய்யப்படும் இந்த போன்களை அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, இந்தியா, சீனா ஆகிய 8 சந்தைகளில் ஒரே சமயத்தில் அறிமுகம் செய்ய உள்ளது.
2008 ம் ஆண்டு நோக்கியா நிறுவனத்திற்கு இந்தியாவில் 70 சதவீதம் பங்குகள் இருந்தன. பின்னர் டியூயல் சிம் மாடல் போன்களின் வருகையால் இந்நிறுவனம் கிட்டதட்ட அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் இந்திய ேஹண்ட்செட் சந்தையில் இருந்து நோக்கியா வெளியேறியது. தற்போது மீண்டும் நோக்கியா, உலக அளவில் காலடி எடுத்து வைக்க உள்ளதால், தற்போது இந்தியாவில் முன்னணியில் இருக்கும் சாம்சங் எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனையை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது. மேலும் குறைந்த விலையில் ஆன நோக்கியா மாடல்கள் ஆப்பிள் போன்ற பிறது நிறுவனங்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும் என்றே கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)