கார்ப்­பரேட் நிர்­வாக விதி­மு­றை­களை பின்­பற்றும் ‘சென்செக்ஸ்’ நிறு­வ­னங்கள்கார்ப்­பரேட் நிர்­வாக விதி­மு­றை­களை பின்­பற்றும் ‘சென்செக்ஸ்’ ... ... ஒட்­டக பாலையும் விட­வில்லை அமுல் ஒட்­டக பாலையும் விட­வில்லை அமுல் ...
இந்­திய அரிசி இறக்­கு­ம­திக்கு சீனா அனு­மதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2016
05:11

புது­டில்லி:இந்­தி­யாவைச் சேர்ந்த, 14 நிறு­வ­னங்­களின் அரிசி இறக்­கு­ம­திக்கு, சீனா அனு­மதி அளித்­துள்­ளது. சீன அரசு, இந்­திய அரி­சியில் பூச்சி தாக்­குதல் உள்­ள­தாக கூறி, அதன் இறக்­கு­ம­திக்கு தடை விதித்­துள்­ளது. இதை­ய­டுத்து, மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் அமைச்­ச­கத்தின் நட­வ­டிக்­கையால், சீன தரக் கட்­டுப்­பாட்டு அமைப்­பினர், செப்­டம்­பரில் இந்­தியா வந்­தனர். அவர்கள், இந்­திய தேசிய பயிர் பாது­காப்பு அமைப்பில் பதிவு செய்­துள்ள, 26 அரிசி ஆலை­களை ஆய்வு செய்­தனர்.
இதை­ய­டுத்து, கே.ஆர்.பி.எல்., பெஸ்ட் புட்ஸ், சர்­வேஸ்வர் புட்ஸ் உள்­ளிட்ட, 14 நிறு­வ­னங்கள், அரிசி ஏற்­று­மதி மேற்­கொள்ள, சீன அரசு, முதன்­மு­றை­யாக, தரச் சான்று வழங்­கி­யுள்­ளது. இது குறித்த தக­வலை, சீன அரசு, மத்­திய அர­சுக்கு தெரி­வித்துள்­ளது. அரிசி உட்­பட, பண்ணைப் பொருட்கள் ஏற்­று­மதி குறைந்து வரும் சூழலில், சரி­யான தரு­ணத்தில், சீன அரசின் அனு­மதி கிடைத்­தி­ருப்­பது, ஏற்­று­மதி நிறு­வ­னங்­களை மகிழ்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது. இந்­தி­யாவின் பாசு­மதி அரிசி மற்றும் அரிசி ஏற்றுமதி, நடப்பு நிதி­யாண்டில், 1.05 கோடி டன்­னாக இருக்கும் என, சர்­வ­சேத தானிய குழு மதிப்­பிட்டு உள்ளது. இந்­நி­லையில், சீன அரசின் நட­வ­டிக்­கையால், இந்தி­யாவின் அரிசி ஏற்­று­மதி, மதிப்­பீட்டை விட அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
அரி­சியின் பங்­க­ளிப்பு:
நாட்டின் மொத்த வேளாண் பொருட்கள் ஏற்­று­ம­தியில், அரி­சியின் பங்­க­ளிப்பு, 18 சத­வீ­த­மாக உள்­ளது. கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்டில், அரிசி ஏற்­று­மதி, 579 கோடி டால­ராக குறைந்­தது. இது, முந்­தைய, 2014 – 15ம் நிதி­யாண்டில், 784 கோடி டால­ராக இருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)