பதிவு செய்த நாள்
20 டிச2016
00:04
புதுடில்லி : செல்லாத ரூபாய் நோட்டுகளை, முறைகேடாக மாற்றியது தொடர்பாக, கடந்த வாரம், நொய்டாவில் உள்ள, ஆக்சிஸ் வங்கி கிளையில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ௨௦ போலி நிறுவன கணக்குகள் மூலம், ௬௦ கோடி ரூபாய் வழங்கப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து, ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, ஷிகா சர்மா, வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஒருசில ஊழியர்களால், வங்கிக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயர், தன்னை பெரிதும் பாதித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், நடந்த தவறு குறித்து ஆராயவும், கூடுதலான பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ளவும், கே.பி.எம்.ஜி., நிறுவனத்தை அமர்த்தியுள்ளதாக கூறியுள்ளார். வங்கி வலுவான அடித்தளத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், நேரம் காலம் பார்க்காமல், 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் கடின உழைப்பு, ஒருசில ஊழியர்களின் மோசமான செயல்பாடுகளால், மறக்கடிக்கப்பட்டு விட்டது எனவும், அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|