பதிவு செய்த நாள்
20 டிச2016
23:41
வாஷிங்டன் : அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அமெரிக்க – இந்திய வர்த்தக குழு கூட்டம் நடைபெற்றது. அதில், அமெரிக்காவிற்கான புதிய இந்திய துாதர் நவ்தேஜ் சர்னா, பங்கேற்று பேசியதாவது:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, ரயில்வே, அடிப்படை கட்டமைப்பு, தயாரிப்பு, சுற்றுச்சூழல் துறைகளில், முதலீட்டிற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவற்றை, அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவிலும் இந்தியநிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெருகி வருகிறது; நிறுவனங்களுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது.
இத்தகைய, பரஸ்பர வர்த்தக நல்லுறவு மேலும் வலுப்பெறுவதற்கு, அமெரிக்க – இந்திய வர்த்தக குழு மற்றும் அதன் உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன். இரு நாடுகளின் பரஸ்பர வர்த்தக உறவு, 10 ஆயிரம் கோடி டாலரில் இருந்து, அடுத்த சில ஆண்டுகளில், 50 ஆயிரம் கோடி டாலராக உயரும். இரு நாடுகளின் வலுவான வர்த்தக உறவு, இந்த இலக்கை எட்ட உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|