பதிவு செய்த நாள்
21 டிச2016
23:45
புதுடில்லி : மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள, வளர்ச்சி அலுவலக ஆணையத்தில், ஐ.இ.டி.எஸ்., என்ற, இந்திய நிறுவன மேம்பாட்டு சேவைகள் பிரிவு உருவாக்கப்பட உள்ளது. இதற்கு, பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் நேற்று நடைபெற்ற, மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொழில் துறையில், அதிக கட்டுப்பாடுகள் நிலவிய, 1950 மற்றும் 1960களில், 11 வகை வர்த்தக பிரிவுகள் உருவாக்கப்பட்டன. தற்போது, பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அப்பிரிவு சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, ஐ.இ.டி.எஸ்., பிரிவு உருவாக்கப்பட உள்ளது. இப்பிரிவில், 6 இணை செயலர்கள் உட்பட, 617 அதிகாரிகளும், அவர்களின் கீழ், மண்டல அளவிலான அதிகாரிகளும் இருப்பர். இவர்கள், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் உட்பட, பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணை புரிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|