பதிவு செய்த நாள்
21 டிச2016
23:49
புதுடில்லி : ‘கிராமப்புற மொபைல் போன் வாடிக்கையாளர்களிடையே, இணைய பயன்பாட்டை அதிகரிக்க, மாதம், 100 எம்.பி., அளவிற்கான, தகவல் பரிமாற்றத்தை, இலவசமாக வழங்கலாம்’ என, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ தெரிவித்துள்ள யோசனையை, ‘நாஸ்காம்’ அமைப்பு வரவேற்றுள்ளது.
இது குறித்து, நாஸ்காம் கொள்கை பிரிவின் மூத்த இயக்குனர், பிஷாகா பட்டாச்சார்யா கூறியதாவது:பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, மின்னணு முறையிலான பணப் பரிவர்த்தனைக்கு மாறுமாறு, மத்திய அரசு மக்களை வலியுறுத்தி வருகிறது. அத்தகைய பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, பல்வேறு பரிசு திட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. எனினும், இத்திட்டத்தின் வெற்றி, கிராமப்புற மக்களும், மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாறுவதில் தான் அடங்கியுள்ளது. மொபைல் போனில் வலைதளங்கள் மூலம், பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, இணையம் அவசியமாகும். இவ்வசதிக்காக, கிராமப்புற மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, மாதம், 100 எம்.பி., தகவல் பரிமாற்ற வசதியை, இலவசமாக வழங்க வேண்டும்.
டிராய் தெரிவித்த இத்திட்டம், இந்திய மக்கள் அனைவரும் பாரபட்சமின்றி மின்னணு பரிவர்த்தனை மேற்கொள்ள துணை புரியும். இத்திட்டத்திற்கான நிதியை, கிராமப்புறங்களில் தொலை தொடர்பு வசதியை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள, யு.எஸ்.ஓ.எப்., நிதியத்தில் இருந்து, மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிராமப்புற மக்கள், மொபைல் போனில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள துவங்கினால், அது, எந்த அளவிற்கு முக்கியம் என்பதை உணர்வர்; அவ்வசதி குறித்து, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|