பதிவு செய்த நாள்
26 டிச2016
23:40
புதுடில்லி : நாட்டில் உள்ள சணல் தொழிற்சாலைகளில் இருந்து, சணல் பை உள்ளிட்ட சணல் பொருட்களை, அரசு மற்றும் தனியார் துறையினர் கொள்முதல் செய்வதற்கு வசதியாக, வலைதளம் துவக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மத்திய ஜவுளி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்: சணல் துறையில், வெளிப்படையான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ‘jutesmart’ என்ற வலைதளத்தை, மத்திய ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி இரானி துவக்கி வைத்தார். இதில், சணல் பை கொள்முதல் தொடர்பான விபரங்களை, பொதுத் துறை நிறுவனங்கள், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம், சணல் தொழிற்சாலைகள், ஆய்வு அமைப்புகள், சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள், கருவூல அலுவலகம் ஆகியவை, எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஜவுளி அமைச்சகம், திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தனி பிரிவை அதன் வலைதளத்தில் துவக்கியுள்ளது. இதில், மாநில வாரியாக செயல்படுத்தப்பட்டு வரும், ஜவுளி துறையினருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விபரங்களை அறியலாம்.
திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ், 15 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதில், இதுவரை, 8.82 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும், 28 நெசவாளர் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள், கைத்தறி நெசவாளர்களுக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்குகின்றன. இத்துடன் நெசவாளர்களுக்கு ‘பங்கர் மித்ரா’ என்ற உதவி மையங்களையும் அமைக்க ஜவுளி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|