பதிவு செய்த நாள்
30 டிச2016
04:39
மும்பை : டாடா ஸ்டீல் நிறுவனம், ஒடிசாவில் அமைக்க உள்ள கனரக தொழிற்சாலைக்கான சிறப்பு பொருளாதார மண்டலத்தில், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது. மேலும் கூடுதல் கால அவகாசமும் கோரியுள்ளது.
டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா ஸ்டீல், உருக்கு பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஒடிசா மாநிலத்தில், கனரக தொழிற்சாலைகளுக்கான, சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க உள்ளது. இதற்கு அங்கு, வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை திரட்ட, டாடா முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி நரேந்திரன் கூறியதாவது: எங்கள் நிறுவனம், ஒடிசாவில் உள்ள கோபால்பூர் என்ற இடத்தில், கனரக தொழிற்சாலைகளுக்கான, சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க உள்ளது. அவற்றில், வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒடிசாவில் உள்ள கலிங்கா நகரில் உருக்காலை அமைத்ததை, டாடா ஸ்டீல் முக்கிய மைல் கல்லாக கருதுகிறது. கடந்த செப்., மாதம், ஜாம்ஷெட்பூர், கலிங்கா நகர் ஆகிய ஆலைகளில், 10 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, நாட்டில், உருக்கு துறைக்கு சவாலாக இருந்தாலும், டாடா ஸ்டீல் சிறப்பாக செயல்பட திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|