பதிவு செய்த நாள்
03 ஜன2017
00:05
புதுடில்லி : மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், தயாரிப்பு துறை வளர்ச்சி, 2016, டிசம்பரில் சரிவடைந்துள்ளது என, நிக்கி மார்கிட் இந்தியா நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் விபரம்: தயாரிப்பு துறையின் வளர்ச்சியை கணக்கிடும், நிக்கி பி.எம்.ஐ., குறியீடு, 2016, டிசம்பரில், 49.6 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, நவம்பரில், 52.3 புள்ளிகளாக இருந்தது. முதன் முறையாக, இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கும் கீழாக சரிவடைந்துள்ளது. அதேசமயம், அக்., – டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், தயாரிப்பு துறை, சராசரியாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு துணை புரியும்.
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொழில் துறையின் கொள்முதல், வேலைவாய்ப்பு வழங்கும் நடவடிக்கைகள் தொய்வடைந்துள்ளன. அத்துடன், ஒரு சில மூலப் பொருட்களின் விலை உயர்வு, புதிய ‘ஆர்டர்’கள் குறைந்தது போன்றவற்றாலும், தயாரிப்பு துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|