பதிவு செய்த நாள்
04 ஜன2017
23:36
பீஜிங் : சீனாவின், ‘குளோபல் டைம்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ள செய்தி: தயாரிப்பு துறையில், சீனாவுக்கு பெரும் போட்டியாக, இந்தியா உருவெடுத்து வருகிறது. ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், இந்தியாவில் கால் பதிக்க உள்ளன. இதைத் தொடர்ந்து, சீனாவைச் சேர்ந்த மேலும் பல நிறுவனங்கள், இந்தியாவில் களமிறங்க கூடும். பணியாற்றும் வயதுடையோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது தான், இந்தியாவின் மிகப் பெரிய பலம். பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் நுழைந்தால், அது, சீனாவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும். அதற்கேற்ப, சீனா, தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி, தயாரிப்பு துறையை மேம்படுத்த வேண்டும்; வேலைவாய்ப்பு வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்நாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், சீன பொருட்களின் இறக்குமதியை குறைக்க திட்டமிட்டுள்ளார். இதுபோன்ற சவால்களை சந்திக்க, சீனாவின் தயாரிப்பு துறை, தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|