பதிவு செய்த நாள்
04 ஜன2017
23:36
புதுடில்லி : உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் குமார் அகர்வால் கூறியதாவது: உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் குறித்த வரைவறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக, உப்பு, சமையல் எண்ணெய், பால், வனஸ்பதி, ஆட்டா, மைதா, அரிசி ஆகிய ஏழு உணவுப் பொருட்களில், அயோடின், கால்சியம், வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என, வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வகை உணவுப் பொருட்களின் பேக்கிங்கில், அதற்கான முத்திரை இடம் பெற வேண்டும்.
இது தொடர்பான அனைத்து விபரங்களும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த வலைதளத்தை பார்வையிட்டு, தங்கள் கருத்துக்களை, 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில், இத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|