பதிவு செய்த நாள்
04 ஜன2017
23:45
புதுடில்லி : சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, டிஜிட்டல் பயிற்சி திட்டத்தை, கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, டில்லியில் நடைபெற்ற விழாவில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியதாவது:இணையம், மிகச் சிறிய நிறுவனத்தை கூட, பெரிய நிறுவனமாக மாற்றும் வல்லமை கொண்டது. இந்தியாவில், இணைய பயன்பாடு வேகமாக வளர்ந்து வருகிறது. இங்குள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள், சுயமாக வலைதளத்தை உருவாக்கி, வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக, கூகுள் நிறுவனம், ‘டிஜிட்டல் அன்லாக்’ என்ற இலவச டிஜிட்டல் பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ‘பிரைமர்’ என்ற, ‘ஆப்’ உருவாக்கப்பட்டு உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில், இதை இலவசமாக பதிவிறக்கி, 10 நிமிடங்களில், ஒரு நிறுவனம், தனக்கென்று தனி வலைதளத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இத்திட்டம் மூலம், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, ஆன்லைன் மற்றும் மொபைல் போன் வாயிலாகவும் பயிற்சி வழங்கப்படும். அத்துடன், நாடு முழுவதும், 40 பயிற்சி மையங்களும் அமைக்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில், 5,000 பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும். பயிற்சிக்கான சான்றிதழை, ஐதராபாத் வணிகவியல் மையம் வழங்கும்.இணைய பயன்பாடு வேகமாக பரவி வரும் இந்தியாவில், சாப்ட்வேர் தீர்வுகளில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து, உலகிற்கே தீர்வளிக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|