பதிவு செய்த நாள்
07 ஜன2017
02:17
புதுடில்லி : டாடா சன்ஸ் நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து, சைரஸ் மிஸ்திரி, 2016, அக்., 24ல் நீக்கப்பட்டு, அப்பொறுப்பிற்கு, ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
அது முதல், சைரஸ் மிஸ்திரி, டாடா குழுமத்தின் மீது பல்வேறு அவதுாறுகளை கூறி வருகிறார். நிறுவனத்தின் நலனுக்காக பாதுகாக்கப்பட வேண்டிய ரகசியங்களை வெளிப்படுத்தி வருகிறார். டாடா குழுமத்தின் பாரம்பரிய மாண்பை சீர்குலைக்கும் வகையில், அவரது நடவடிக்கை உள்ளது. இதனால், டாடா குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு குறைந்துள்ளது. இது, டாடா நிறுவனங்களின் பங்கு முதலீட்டாளர்களையும் பாதித்துள்ளது.
இத்தகைய நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்தும் சைரஸ் மிஸ்திரியை நீக்கும் நோக்கில், பிப்., 6ல், சிறப்பு பொதுக் குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், டாடா சன்ஸ் பங்கு முதலீட்டாளர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|