பதிவு செய்த நாள்
08 ஜன2017
01:49
புதுடில்லி:டில்லியில், பிரகதி மைதானத்தில், சர்வதேச புத்தக கண்காட்சி துவங்கியுள்ளது. வரும், 15ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், 800க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன. அவற்றில் ஒன்றான, நார்டன் பிரஸ், புதிய எழுத்தாளர்களுக்கு, புத்தகம் வெளியிடுவது மற்றும் விற்பனை தொடர்பாக, இலவச ஆலோசனை சேவையை துவக்கியுள்ளது.
இந்நிறுவனத்தின் துணை நிறுவனரான பார்கவா அடபல்லே கூறியதாவது:ஒரு புத்தகம் உருவாவதில், அதன் கையெழுத்து பிரதியில் இருந்து அச்சடிப்பு வரை, பல நிலைகள் உள்ளன. அச்சடித்த புத்தகங்களை சந்தைப்படுத்துவதிலும் தனித்தன்மை வேண்டும். புதிய எழுத்தாளர்களில் பலர், புத்தகம் வெளியிடுவது எப்படி என்பதை அறியாமல் உள்ளனர்.
அவர்களின் படைப்புகளை புத்தகமாக உருவாக்கி, விற்பனை செய்வது வரையிலான ஆலோசனைகளை, இந்த கண்காட்சியில் இலவசமாக வழங்குகிறோம். புதிய எழுத்தாளர்கள் இச்சேவையை பயன்படுத்தி, தங்கள் புத்தகத்தை, ‘ஆன்லைன்’ மூலமாகவும் வெளியிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|