பதிவு செய்த நாள்
08 ஜன2017
01:51
மும்பை:‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், சிமென்ட் துறையின் வளர்ச்சி சரிவடையும்’ என, இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விபரம்:நடப்பு நிதியாண்டில், சிமென்ட் உற்பத்தி, 4 – 6 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், இந்த வளர்ச்சி, தற்போது, 4 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. அரசின் நடவடிக்கை,
குறிப்பாக, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாக, சிமென்ட் மற்றும் உருக்கு துறைகளின் விற்பனை வளர்ச்சி குறைந்துள்ளது.கடந்த ஆண்டு, ஏப்., – நவ., வரை, சிமென்ட் உற்பத்தி, 4.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நவம்பரில், சிமென்ட் உற்பத்தி வளர்ச்சி, 0.5 சதவீதமாக குறைந்துள்ளது.
இது, அக்., – செப்டம்பரில், முறையே, 6.2 சதவீதம் மற்றும் 5.5 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு, நவ., – டிசம்பரில், இந்தியாவில் சிமென்ட் விற்பனை, 20 – 25 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலத்தில், ஒரு மூட்டை சிமென்ட் விலை, 15 – 20 ரூபாய் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டின் சிமென்ட் தேவையில், குடியிருப்புகளின் பங்களிப்பு, 65 சதவீதமாக உள்ளது. இது, நடப்பு நிதியாண்டில் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பணத் தட்டுப்பாடு காரணமாக, சிமென்ட் நிறுவனங்கள், முகவர்களுக்கு அதிகளவில் கடன் வழங்கியுள்ளன. அதனால், சிமென்ட் நிறுவனங்களுக்கு, நடைமுறை மூலதன தேவை அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|