பதிவு செய்த நாள்
09 ஜன2017
23:32
புதுடில்லி : ‘அசோசெம்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள, டொனால்டு டிரம்ப், ‘உள்ளூர் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, சீனா, மெக்சிகோ நாடுகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பணிகள் குறைக்கப்படும்’ என, கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில், ஓட்டுகளை கவர, அவர் இவ்வாறு கூறியதாக, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எண்ணியிருந்தன. அது தவறு என, டிரம்ப் பதவிக்கு வருவதற்கு முன்பாகவே எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன. இதனால், இந்தியாவும் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது. அதனால், இது ஏதோ சீனா, மெக்சிகோ நாடுகளின் பிரச்னை என, எண்ணாமல், உள்நாட்டு நிறுவனங்களை காக்க, இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; டிரம்ப் அரசுடன் நல்லுறவை மேம்படுத்த வேண்டும். அமெரிக்கா மட்டுமின்றி, சீனாவின் பொருள் குவிப்பு நடவடிக்கையும், இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கும் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|