பதிவு செய்த நாள்
09 ஜன2017
23:33
மும்பை : பி.எஸ்.இ., என, சுருக்கமாக அழைக்கப்படும், மும்பை பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யவும், வர்த்தகம் மேற்கொள்ளவும், ‘பி.எஸ்.இ ஸ்டார் எம்.எப்.,’ என்ற, மொபைல் போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கை: மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யவும், வர்த்தகம் மேற்கொள்ளவும் உதவும் வகையில், பி.எஸ்.இ ஸ்டார் எம்.எப்., என்ற, மொபைல் போன் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது, கூகுள் பிளேஸ்டோரில், இந்த ஆப் கிடைக்கிறது. இதை, அனைத்து மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள், முகவர்கள், பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர்கள், மொபைல் போனில் பதிவிறக்கி கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையின், பி.எஸ்.இ ஸ்டார் எம்.எப்., மாதம், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட, எஸ்.ஐ.பி., முதலீட்டு திட்டங்களின் வர்த்தகத்தை கையாண்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|