பதிவு செய்த நாள்
11 ஜன2017
01:26
புவனேஸ்வர் : நால்கோ நிறுவனம், தன் ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடிவு செய்து உள்ளது.
பொதுத் துறை நிறுவனமான, நால்கோ நிறுவனம், அலுமினியம் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு, 68 லட்சம் டன் உற்பத்தித் திறனுடைய ஆலை உள்ளது. இந்நிலையில், ஆலையின் திறனை, 73.25 லட்சம் டன்னாக அதிகரிக்க, நால்கோ நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் தலைவர் தபான் குமார் சந்த் கூறியதாவது: சர்வதேச அளவில் நெருக்கடி இருந்தாலும், எங்கள் நிறுவனம், தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால், நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, பங்குச்சந்தைகளில், பங்கின் விலையும் உயர்ந்துள்ளது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், ஆலைகளின் உற்பத்தித் திறனை, 68 லட்சம் டன்னில் இருந்து, 73 லட்சம் டன்னாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நால்கோவின், பாக்சைட் சுரங்கம், 18 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|