புதிய சமை­யல் சாத­னங்­கள்; ஆம்வே இந்­தியா அறி­மு­கம்புதிய சமை­யல் சாத­னங்­கள்; ஆம்வே இந்­தியா அறி­மு­கம் ... பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பாதிப்பு பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பாதிப்பு ...
விற்­ப­னை­யில் மாற்­றம் இருக்­காது; டொயொட்டா நிறு­வ­னம் எதிர்­பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2017
23:53

கவுகாத்தி : ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, கார் தயாரிப்பு நிறுவனமான, டொயொட்டா, தன் வாகனங்களின் விற்பனையில், இந்த ஆண்டு பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என, கருதுவதாக தெரிவித்திருக்கிறது.
டொயொட்டா நிறுவனம், இந்தியாவில், கிரிலோஸ்கர் குழுமத்துடன் இணைந்து, கடந்த ஆண்டில், 1,34,149 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. இருப்பினும், அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடும் போது, 4 சதவீத அளவுக்கு விற்பனை குறைந்துவிட்டது.
இது குறித்து, டொயொட்டா கிரிலோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனரும், விற்பனை பிரிவின் துணைத் தலைவருமான, என்.ராஜா கூறியதாவது: நடப்பு, 2017ல், எங்கள் இலக்கு, கடந்த ஆண்டில் விற்ற அளவுக்கு அல்லது அதைவிட சற்று அதிகமாக விற்பது என்று தான் வைத்திருக்கிறோம். தேவைக்கான சூழல், சந்தை எழுச்சி இவற்றை பொறுத்து, தேவைப்பட்டால் இலக்கை மாற்றிக் கொள்வோம். கடந்த ஆண்டை பொறுத்தவரை, விற்பனை சாதகமாக இருப்பினும், அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பு, இந்த ஆண்டு மார்ச் வரை நீடிக்கும் என, கருதுகிறோம். பொதுவாக, டிச., மாதத்தை பொறுத்தவரை, வாகன சந்தையில் விற்பனை நன்றாக இருக்கும். கார் தயாரிப்பாளர்களும், கையிருப்பை முழுவதும் விற்பனை செய்ய, பல சலுகைகளை அறிவிப்பர். இருப்பினும், கடந்த இரு மாதங்களாக, வாடிக்கையாளர்கள் வருகை குறைவாக இருக்கிறது. மேலும், டில்லி, அதன் புறநகர் பகுதிகளில், நீதிமன்ற தடை காரணமாக, இன்னோவா, பார்ச்சூனர் ஆகிய வாகனங்களின் விற்பனையிலும் பாதிப்பு ஏற்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)