பதிவு செய்த நாள்
01 பிப்2017
04:36
புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனம், நெக்ஸா ஷோரூம்களின் எண்ணிக்கையை, அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
உள்நாட்டில், கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில், மாருதி சுசூகி இந்தியா முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், நாடு முழுவதும், 121 நகரங்களில், நெக்ஸா என்ற பெயரில், 200 நவீன ஷோரூம்களை கொண்டுள்ளது. அங்கு, தன் பிரீமியம் வகை கார்களை விற்பனை செய்கிறது. இந்நிலையில், நெக்ஸா ஷோரூம்களின் எண்ணிக்கையை, இரு மடங்காக அதிகரிக்க, மாருதி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மாருதி நிறுவனத்தின் அதிகாரி, ஆர்.எஸ்.கல்சி கூறியதாவது: எங்கள் நிறுவனத்திற்கு, 200 நெக்ஸா ஷோரூம்கள் உள்ளன. அதில், 2015 ஜூலை முதல், இதுவரை, 1.85 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டு இறுதிக்குள், நெக்ஸா ஷோரூம்களின் எண்ணிக்கை, 250 ஆக உயர்த்தப்படும். நெக்ஸா ஷோரூமில், புதிய மாடல் பலேனோ ஆர்.எஸ்., கார், இந்த நிதியாண்டுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும், 2020ல், நெக்ஸா எண்ணிக்கையை, 400 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|