பதிவு செய்த நாள்
08 பிப்2017
08:10
மும்பை : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உள்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், ‘எச்1 பி’ விசாவிற்கான, குறைந்தபட்ச ஊதிய வரம்பை, இரு மடங்கு உயர்த்தி, 1.30 லட்சம் டாலராக அதிகரிக்க முடிவு செய்துள்ளார். இதனால், அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கு, கடும் பாதிப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, எல் அண்ட் டி டெக்னாலஜிஸ் சர்வீசஸ் நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் கேசப் பாண்டா கூறியதாவது: அமெரிக்காவில் உள்ள எங்கள் நிறுவனத்தில், 1,600 பொறியாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில், 65 சதவீதம் பேர், ‘எச்1 பி’ விசாவில் பணியாற்றுகின்றனர். அவர்களின் ஊதியத்தை உயர்த்தினால், நிறுவனத்தின் லாப வரம்பு, 2 – 2.5 சதவீதம் பாதிக்கும்.இது குறித்து, அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் தெரிவித்த போது, அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அதனால், அமெரிக்காவில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில், பொறியாளர்களை, இந்தியாவிற்கு திரும்ப அழைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|