பதிவு செய்த நாள்
10 பிப்2017
03:49
திருவனந்தபுரம் : கேரளாவுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 1.42 கோடியாக அதிகரித்துள்ளது.
இயற்கை வளம் கொண்ட கேரள மாநிலத்தில், அதிக சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால், அம்மாநிலத்துக்கு, பிற மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர். இதையடுத்து, கடந்த, 2016ம் ஆண்டில், கேரளாவுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 1.42 கோடியாக உயர்ந்துள்ளது. அதில், உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 1.32 கோடி; வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை, 10 லட்சம் என்றளவில் உள்ளது.
இதுகுறித்து, அம்மாநில சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கேரளாவில், நவம்பர் மாதம் தான், சுற்றுலா சீசன் களைகட்டும். சுற்றுலா துறையை ஊக்குவிக்க, மாநில அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், அதிக பயணிகள் வருகின்றனர். இதன் மூலம், அரசுக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கிறது. மத்திய அரசின், செல்லாத நோட்டு அறிவிப்பால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பணப்புழக்கம் குறைந்த நிலையிலும், கேரளாவுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|