பதிவு செய்த நாள்
10 பிப்2017
23:58
புதுடில்லி : வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும், சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர், லஷ்மி வேணு கூறியதாவது: டி.வி.எஸ்., குழுமத்தின் ஓர் அங்கமான, சுந்தரம் கிளேட்டன், 750 கோடி ரூபாய் முதலீட்டில், உள்நாட்டில் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ளவும், அமெரிக்காவில், புதிய தொழிற்சாலையை துவக்கவும் திட்டமிட்டு உள்ளது. இந்தியாவில், நிறுவனத்திற்கு நான்கு தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் விரிவாக்கத்திற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில், 400 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். இதன் மூலம், நிறுவனத்தின் உற்பத்தித் திறன், 60 ஆயிரம் டன்னில் இருந்து, 70 ஆயிரம் டன்னாக உயரும். அமெரிக்காவில், தெற்கு கரோலினாவில் உள்ள, டோர்செஸ்டர் நகரில், 50 ஏக்கர் பரப்பில், புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 350 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். இத்தொழிற்சாலையில், 2018 இறுதியில், உற்பத்தி துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|