பதிவு செய்த நாள்
14 பிப்2017
00:37
சென்னை : சென்னையில், வோடபோன் நிறுவனம், வோடபோன் சூப்பர்நெட் என்ற மேம்படுத்திய, ‘4ஜி’ சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, வோடபோன் இந்தியா, தமிழக பிரிவின் வணிக தலைவர், எஸ்.முரளி கூறியதாவது: இந்தியாவில், தொலை தொடர்பு சேவையில், எங்கள் நிறுவனம் முன்னணியில் உள்ளது. கேரளா, கர்நாடகா, டில்லி, மும்பை, ஹரியானா, உ.பி., – குஜராத், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய தொலை தொடர்பு வட்டங்களில், வோடபோன் சூப்பர்நெட், ‘4ஜி’ சேவை துவக்கப்பட்டு உள்ளது. இதற்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
தமிழகத்தில், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில், இந்த வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது, சென்னையிலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளருக்கு மேம்படுத்திய, ‘4ஜி’ சிம் கார்டு இலவசமாக வழங்கப்படும். அதிவேக, ‘4ஜி’ சிம் கார்டு உடன், 2 ஜி.பி., டேட்டா இலவசமாக தரப்படும். எட்டு ரூபாய்க்கு, 30 எம்.பி., முதல், 999 ரூபாய்க்கு, 22 ஜி.பி., வரை, பல்வேறு டேட்டா சேவைகளை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|