பதிவு செய்த நாள்
15 பிப்2017
08:25
மும்பை : கேபிட்டல் புட்ஸ் நிறுவனம், 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டு உள்ளது.
கேபிட்டல் புட்ஸ் நிறுவனம், சிங்க்ஸ் சீக்ரெட் என்ற பிராண்டில், நுாடுல்ஸ், மசாலா பொருட்கள் உள்ளிட்ட நுகர்பொருள் தயாரிப்பு துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு நிதிஆண்டில், 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், அஜய் குப்தா கூறியதாவது: எங்கள் நிறுவனம், மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட, 11 மாநிலங்களில், மசாலா பொருட்கள், நுாடுல்ஸ் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ஆண்டுதோறும், 40 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில், 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. இது, அடுத்த ஆண்டில், 700 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இந்த நிதிஆண்டில், மசாலா பொருட்கள் மூலம் மட்டும், 250 கோடி ரூாபாய் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது, அடுத்த மூன்றாண்டுகளில், 1,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|