பதிவு செய்த நாள்
15 பிப்2017
08:28
புதுடில்லி : மின்னணு பங்கு ஆவண காப்பக நிறுவனமான, சி.டி.எஸ்.எல்., மற்றும் மியூசிக் பிராட்கேஸ்ட் நிறுவனத்தின் பங்கு வெளியீடுகளுக்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ ஒப்புதல் அளித்துள்ளது.
சி.டி.எஸ்.எல்., நிறுவனத்தில், மும்பை மற்றும் கோல்கட்டா பங்குச் சந்தைகள், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகியவை, பங்கு முதலீடு மேற்கொண்டுள்ளன. இவை, 3.50 கோடி பங்குகளை, ஏல முறையில் விற்பனை செய்ய உள்ளன; அவற்றில், சி.டி.எஸ்.எல்., ஊழியர்களுக்கு, 7 லட்சம் பங்குகள் ஒதுக்கப்படும் என, தெரிகிறது. ‘டைனிக் ஜக்ரன்’ என்ற ஹிந்தி நாளிதழ் குழுமத்தைச் சேர்ந்த, மியூசிக் பிராட்கேஸ்ட் நிறுவனம், ‘ரேடியோ சிட்டி’ என்ற பண்பலைவரிசை ஒலிபரப்பை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 400 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம், இந்நிறுவனத்தின் பங்கு விற்பனை நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|