பதிவு செய்த நாள்
28 பிப்2017
23:49
பார்சிலோனா : தொலை தொடர்பு துறையில் உள்ள, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான, ‘5ஜி’ இன்டர்நெட் சேவையில் ஈடுபட, நோக்கியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா கூறியதாவது: எதிர்காலத்தில், ‘4ஜி’க்கு பின், ‘5ஜி’ தொழில்நுட்பம் சார்ந்த, இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும். எனவே, வாடிக்கையாளர்களுக்கு, அதிநவீன இன்டர்நெட் சேவையை வழங்க, நோக்கியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். இந்த ஒப்பந்தம், இன்று கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம், அதிவேக தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.‘ஸ்மார்ட் சிட்டி’ நகரங்களுக்கு தேவையான, ஐ.ஓ.டி., எனப்படும், சாதனங்களுக்கு இடையிலான இணைய பயன்பாடு சார்ந்த சேவைகளுக்கும், இந்த ஒப்பந்தம் துணை புரியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|