பதிவு செய்த நாள்
28 பிப்2017
23:50
ஜெய்ப்பூர் : குறைந்த விலையிலான, ஊட்டச்சத்துள்ள பிஸ்கட் வகைகளை சாப்பிடுவதில், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.
இது குறித்து, பிஸ்கட் தயாரிப்பாளர்கள் நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில், ஆண்டுக்கு, 36 லட்சம் டன் பிஸ்கட் விற்பனையாகிறது. அதில், குறைந்த விலையிலான, ஊட்டச்சத்துள்ள பிஸ்கட்டுகளை அதிகம் உண்ணும் மாநிலங்களில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஆண்டுக்கு, 1.90 லட்சம் டன், ‘குளுகோஸ், மேரி மற்றும் மில்க்’ பிஸ்கட்டுகள், விரும்பி உண்ணப்படுகின்றன. இந்த பட்டியலில், உ.பி., – உத்தரகண்ட் ஆகியவற்றை அடுத்து, நான்காம் இடத்தில், தமிழகம் உள்ளது. இங்குள்ளோர், ஆண்டுக்கு, 1.11 லட்சம் டன் பிஸ்கட்டுகளை சாப்பிடுகின்றனர்.
நாட்டில், குறைந்த விலையிலான ஊட்டச்சத்து பிஸ்கட் விற்பனையில், முதல் ஐந்து மாநிலங்கள், ஆறில் ஒரு பங்கை கொண்டுள்ளன. இந்தியாவில், தினமும், 6 கோடி பிஸ்கட் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன. உள்நாட்டு பிஸ்கட் சந்தை, 37,500 கோடி ரூபாயாக உள்ளது. இதில், அமைப்பு சார்ந்த மற்றும் சாராத பிஸ்கட் துறைகளின் பங்கு, முறையே, 26,500 கோடி ரூபாய் மற்றும் 11 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. பிஸ்கட் துறை, நேரடியாகவும், மறைமுகமாகவும், 72 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.இந்தாண்டு, குறைந்த விலையிலான ஊட்டச்சத்து பிஸ்கட் விற்பனை, 18.25 லட்சம் டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|