பதிவு செய்த நாள்
28 பிப்2017
23:51
புதுடில்லி : டில்லியில், சர்வதேச உணவு கண்காட்சி, அக்டோபரில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, 22 நாடுகளின் பிரதிநிதிகளுடன், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் சில்லரை விற்பனை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏராளமான அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமுடன் முன்வரத் துவங்கியுள்ளன. ஆனால், அவை, வீட்டு பராமரிப்பு பொருட்கள் போன்ற, உணவு சாரா பொருட்களையும் விற்பனை செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், இந்தியாவில் தொழில் துவங்குவதற்கு முன், 6 – 8 மாதங்களுக்கு, உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய, அனுமதிக்குமாறு கோருகின்றன. இதன் மூலம், நுகர்வோரின் நாடித் துடிப்பை அறிந்து, முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என, அவை கூறுகின்றன. இது குறித்து, பிரதமர் அலுவலகம் மற்றும் இதர துறைகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|