பதிவு செய்த நாள்
07 மார்2017
05:25
பார்சிலோனா : வரும் செப்டம்பரில், இந்தியாவில், முதன்முறையாக, சர்வதேச மொபைல் போன் மாநாடு நடக்க உள்ளதாக, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, இக்கூட்டமைப்பின் இயக்குனர், ஜெனரல் ராஜன் எஸ்.மேத்யூஸ் கூறியதாவது: சர்வதேச மொபைல் போன் மாநாடு, ஏற்கனவே, பார்சிலோனா மற்றும் ஷாங்காய் ஆகிய இடங்களில் நடந்துள்ளது.தொலை தொடர்பு துறையில், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. அதனால், இந்தியாவில், தென் கிழக்கு ஆசிய சந்தைகளை குறிவைத்து, முதன்முறையாக, மாநாட்டை நடத்த உள்ளோம். இது, வரும், செப்., 27ல் துவங்கி, மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இதற்கு, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஆகியவை ஆதரவு தெரிவித்து உள்ளன. மேலும், சர்வதேச ஜி.எஸ்.எம்., கூட்டமைப்பும், இம்மாநாட்டிற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.இந்த மாநாட்டில், ‘பேஸ்புக், ஹவாய், எரிக்சன், சிஸ்கோ’ உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. இத்துடன், கண்காட்சி, திறன் மேம்பாடு உட்பட, பல அம்சங்கள் இடம் பெற உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|